ACJU/NGS/2023/196
2023.08.06 (1445.01.18)
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த மர்ஹூம் அஷ்ஷைக் கச்சு முஹம்மத் ஹரீஸ் (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார், கடந்த வெள்ளிக்கிழமை (2023.08.04 ஆம் திகதி) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – மூதூர் பிரதேசக் கிளையின் முன்னாள் தலைவரும், தற்போதைய உபதலைர்களில் ஒருவருமாவார்கள். மேலும், மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் தற்போதைய பிரதி அதிபராகவும், அக்கல்லூரியின் பொருளாளராகவும் கடமையாற்றி வந்த அன்னார் தனது கடமைகளையும், பெறுப்புக்களையும் சிறப்பாக நிறைவேற்றியவராவார்கள்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா