மர்ஹூம் அஷ்ஷைக் கே. அப்துஷ் ஷகூர் (الله يرحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2023/137

2023.05.18 (1444.10.27)

கண்டி மாவட்டத்தின் தும்பர பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் அஷ்ஷைக் கே. அப்துஷ் ஷகூர் (الله يرحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார், 2023.05.18 ஆம் திகதி தனது 48 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கொழும்பு தாருல் உலூம் அல் ஹுமைதிய்யா அரபுக் கல்லூரியின் முதல் வகுப்பு மாணவரான அன்னார் 1998 ஆம் ஆண்டு அல்ஆலிம் சான்றிதழ் பெற்றவராவார். 2019 ஆம் ஆண்டில் யூனானி மருத்துவத்தில் பட்டம் பெற்ற அவர்கள் கல்வியிலும், வைத்தியத் துறையிலும் மிக திறமையாக செயல்பட்டதுடன் சமூகப்பணிகளிலும் தைரியமாகவும், துணிச்சலுடனும் செயல்படக்கூடிய ஒருவராவார். அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – தும்பர பிரதேசக் கிளையின்; முன்னாள் தலைவராகவும், தற்போதைய உப தலைவராகவும் செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *