2022.01.30ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் காலஞ்சென்ற ஜம்இய்யாவின் முன்னாள் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் மர்ஹூம் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் (மதனீ) அவர்களின் ‘சரன்தீப் கண்ட சான்றோர்கள்’ புத்தக வெளியீட்டு நிகழ்வு கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.
அஷ்-ஷைக் அல்காரீ முஹம்மத் ஃபஹ்மி அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவ உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எச். உமர்தீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் பற்றிய ஒரு தெளிவை கௌரவ பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் முன்வைத்தார்கள்.
பின்னர், அஷ்ஷைக் அல்உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாறக் (றஹ்) அவர்களைப் பற்றியதொரு காணொளி திரையில் காண்பிக்கப்பட்டதோடு கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் எஸ்.எல். நௌபர் அவர்கள் முபாரக் ஹஸரத் (றஹ்) பற்றிய வாழ்க்கை சுருக்கத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து புத்தக அறிமுகம் கௌரவ ஃபத்வாக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் எம்.டீ.எம். ஸல்மான் அவர்கள் மூலம் முன் வைக்கப்பட்டது.
பின்னர், விசேட அதிதிகளுக்கும், ஆலிம்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நூலின் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டதோடு, அஷ்ஷைக் அல்உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாறக் (றஹ்) அவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அஷ்ஷைக் அல்உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாறக் (றஹ்) அவர்களைப் பற்றிய தனது அனுபவத்தை ஜம்இய்யாவின் உதவிப் பொருளாளர் கலாநிதி அஷ்-ஷைக் அஸ்வர் அவர்கள் முன்வைத்ததோடு, இந்நாட்டு ஆலிம்களின் பங்களிப்பு பற்றிய ஒரு உரையை ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
பின்னர், அஷ்ஷைக் அல்உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாறக் (றஹ்) அவர்களின் மகன் முஆத் முபாறக் அவர்கள் தன் குடும்பம் சார்பாக சில கருத்துக்களையும், நன்றியையும் தெரிவித்ததோடு, நன்றியுரையை ஜம்இய்யாவின் கௌரவப் பொருளாளர் அஷ்ஷைக் ஏ.எல்.எம். கலீல் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இறுதியாக, தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு, துஆ ஸலவாத்துடன் இந்நிகழ்ச்சி பிற்பகல் 12.45 மணி அளவில் இனிதே நிறைவுபெற்றது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா