2022.07.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான இளைஞர் விவகாரப் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஹட்டன் ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் திக்ஓயா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி மற்றும் ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.