முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகருமான மிலிந்தமொறகொட ஜம்இய்யாவின் பிரதிநிதிதிகளுடன் சிநேகபூர்வ சந்திப்பு

2024.01.09ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகருமான அசோக மிலிந்தமொறகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிதிகளுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்வதற்காக ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

குறித்த சந்திப்பில் ஜம்இய்யாவின் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதனையடுத்து நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன், உப செயலாளர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோருடன் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *