2022.10.27 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் தொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் ‘முஸாதா அறக்கட்டளை’ நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மெளலானா அஹமது பட்டேல், மெளலானா ஸலீம் சித்தாத், மெளலானா ஜுனைத் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.
இதில் ஜம்இய்யா சார்பாக கெளரவ உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக், கெளரவ பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.அர்கம் நூராமித், கெளரவ உதவி பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.ஏ.ஸீ.எம். பாழில் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். ரிபா ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் சேவைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிமுகம் வழங்கப்பட்டது.