ACJU/NGS/2024/353
28.07.2024
கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு,
இலங்கைக்கு அனுப்பப்பட்ட அல்-குர்ஆன் அரபுப் பிரதிகள் மற்றும் மொழிபெயர்ப்புப் பிரதிகள் சம்பந்தமாக.
இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள அல்-குர்ஆன் அரபுப் பிரதிகள் மற்றும் மொழிபெயர்ப்புப் பிரதிகள் தொடர்பான ஒரு விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக இக்கடிதத்தினை எழுதுகிறோம்.
மேற்படி அல்-குர்ஆன் பிரதிகள் அல்-ஹாஜ் ஸாதிக் அவர்களினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அவர்களது பெயரில் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அப்பிரதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி கிடைக்கப் பெறாததன் காரணமாக இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. இப்பிரதிகள் அனுப்பப்படமுன் புத்தசாசன, சமய விவகார அமைச்சர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரிடம் சம்மதம் மற்றும் முறையான அனுமதி பெறப்பட்டே அனுப்பி வைக்கப்பட்டதாக அல்-ஹாஜ் ஸாதிக் அவர்கள் கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்த அல்-குர்ஆன் தொகைகளை விடுவிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்படுவதை காணமுடிகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட இஸ்லாமிய மத நூல்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான விஷயங்களைப் பற்றி கலந்துரையாட 2024 மே 20 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்தது என்பதை தயவுசெய்து நினைவூட்ட விரும்புகிறோம். ஆனால் திட்டமிடப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் காரணமாக உங்களால் கலந்துகொள்ள முடியாது என்று உங்கள் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது.
இந்த விஷயத்தை உடனடியாக கவனிக்குமாறு உங்கள் தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா