30 ஆண்டுகால யுத்தத்தின் முடிவை நினைவுகூரல்

ACJU/NGS/2022/126

2022.05.18

 

நம்நாடு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இத்தருணத்தில் 30 வருட யுத்தத்தின் நிறைவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவு கோருகின்றது.

 

இன, மத வித்தியாசமின்றி அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக வாழும் ஒரு ஐக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இத்தியாகங்களை அர்த்தமுள்ளதாக்குவோம்.

 

இந்நாட்டுப் பிரஜைகளுடன் தொடர்புபட்ட விடயங்களில் தீர்வுகளை முன்வைக்கும் போது அனைவரையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுவதே எமது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என ஜம்இய்யா நம்புகின்றது.

 

அநியாயமாக கொலை செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்று வேண்டுவதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஜம்இய்யத்துல் உலமா ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 

உலகெங்கிலுமுள்ள அனைத்து யுத்தங்களும் நிறுத்தப்பட்டு, உலகில் நீதி மற்றும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை அவசரமாக நீங்கி, நம் தாய்நாடு சுபீட்சம் பெற வேண்டுமென்றும் இத்தினத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *