அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி

பெல்லங்வில ரஜமகாவிகாரையின் விகராதிபதியும் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியுமான பேராசிரியர் பெல்லங்வில விமல ரத்ன தேரர் அவர்களின் மரணத்தால் கவலையடையும் பௌத்த மதகுருமார்கள், ஏனைய பௌத்த சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாமா இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பாக அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

நீதியும், ஒழுக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதில் தன்னை அர்பணித்த இவர்களின் மரணம் இந்நாட்டிற்கு ஒரு இழப்பாகும். மதங்களுக்கு மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குறியவையாகும்.

அவர் சகவாழ்வை கட்டியெழுப்ப எடுத்த முயற்சிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து இந்த நாட்டில் இனங்களுக்கு மத்தியில் நல்லுறவை வளர்ப்பது நாம் அவருக்கு செய்யும் கைமாராக அமையும். ஏனவே நாம் அவற்றை தொடர்ந்தும் முன்னெடுக்க முன்வர வேண்டும்.

 

அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன