22.05.2019
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டதாக சில பொய்யான செய்திகள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வண்ணமுள்ளன. அத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை எவரும் நம்பவோ அல்லது அவற்றைப் பரப்பவோ வேண்டாம் என ஜம்இய்யாவின் தலைமையகம் வேண்டிக் கொள்கிறது.
ஜம்இய்யாவின் சகல அறிவித்தல்களும் அதன் உத்தியோகபூர்வ கடிதத் தாள்களில் ஒப்பமிடப்பட்டு இறப்பர் முத்திரை இடப்பட்டே வெளியிடப்படுகின்றன. அவை ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் பிரசுரிக்கப்படுகின்றன என்பதை சகலருக்கும் அறியத் தருகிறோம்.
‘முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.’ (49: 06)
ஆகவே, மேற்படி அல்குர்ஆன் வசனத்திற்கமைய வதந்திகளையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு ஜம்இய்யா நாட்டு மக்களை வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா