Researched Fatwa
அநாதைக் குழந்தைகளைப் பராமரித்தல்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
குழந்தைகள் எமக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட செல்வங்களாகும். அக்குழந்தைகளைப் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவது பெற்றோர்களின் பொறுப்பாகும். அக்குழந்தைகள் பெற்றோர் இருவரையுமே இழந்த நிலையில் இருப்பார்களாயின் அவர்களைப் பராமரிப்பது அவர்களின் குடும்பத்தவர்களைச் சாரும். இதனை இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
ஒரு குழந்தை பெற்றோர்கள் இருவரையும் இழந்து அநாதையாகிவிட்டால் அக்குழந்தையைப் பராமரிப்பதற்கு பெண்களே மிகத் தகுதியானவர்கள். அந்த வகையில் அக்குழந்தையைப் பராமரிப்பதற்கு குழந்தையின் தாயின் தாய் உரிமை பெறுவார். அவர் மரணித்துவிட்டால் அவருடைய தாய்மார்கள் உரிமை பெறுவர். அவர்கள் யாரும் இல்லாத போது குழந்தையின் தந்தையின் தாய் உரிமை பெறுவார். (மின்ஹாஜுத் தாலிபீன் – கிதாபுந் நபக்காத்)
பெற்றோரை இழந்த குழந்தை யாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டாலும் அக்குழந்தையுடைய மார்க்கப்பற்று, கல்வி, ஒழுக்கம், மனோவியல் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக முயற்சிப்பது தாய்வழி, தந்தைவழி குடும்ப அங்கத்தவர்கள் அனைவருடைய மனிதாபிமானக் கடமையாகும்.
எனவே குழந்தையின் மனோநிலை பாதிக்கப்படாமல் பராமரித்தல், அக்குழந்தையின் தேவைகளை நிறைவேற்றல் இரு குடும்பத்தவர்களதும் கடமையும் பொறுப்புமாகும்.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.