30.05.2019 (24.09.1440)
அப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும்
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் பலர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் குற்றவாளிகள் பற்றிய விபரத்தை பாதுகாப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற கடப்பாடு நம்மனைவருக்கும் உண்டு. அதே வேளையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும் முரண்பாடுகளுக்காகவும் அப்பாவி மக்களைக் காட்டிக் கொடுப்பது மிகப்பெரும் அநீதியும் பாவமுமாகும் என்பதை அனைவரும் மனதில் கொள்ளல் வேண்டும்.
மேலும், பள்ளிவாயல்கள் எந்த சாரார் நிர்வகிப்பதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வின் இல்லங்களாகும். சட்டத்தை கையிலெடுத்து ஒரு சாரார் மறு சாராரின் மஸ்ஜிதில் கைவைப்பது சட்ட முரணான செயல் மாத்திரமன்றி மார்க்க விரோத செயலுமாகும். அல்லாஹ்வின் கோபத்தையும் சாபத்தையும் கொண்டுவரும் மிகப் பயங்கரமான செயலுமாகும்.
ஒரு சாராரின் செயற்பாடுகளில் பிரச்சினை இருப்பதாகக் காணுகின்றபோது அவற்றுக்கான தீர்வை முறையாகவும் பண்பாடாகவும் தேவைப்படின் சட்ட ரீதியாகவும் பெற்றுக் கொள்ள முயல்வதே சரியான நிலைப்பாடாகும்.
இவ்விடயங்களைக் கவனத்திற்கொண்டு முஸ்லிம் சமூகம் விழிப்புடனும்> கவனமாகவும்> நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக்கொள்கின்றது.
வஸ்ஸலாம்!
அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
உதவிச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா