அவசர வேண்டுகோள்!

15.05.2019

அவசர வேண்டுகோள்!

கடந்த  13.05.2019  அன்று  குருணாகல், கம்பஹா  மாவட்டங்களில்  இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளைப்  பூர்த்தி செய்து  கொடுக்க முன்வருமாறு  தனி  மனிதர்களிடமும், அமைப்புக்களிடமும்  அகில  இலங்கை ஜம்இய்யதுல்  உலமா  வேண்டுகோள் விடுக்கிறது.

குழந்தைகளின் தேவைகளையும்,  ரமழான் கால தேவைகளையும்  நிறைவேற்றிக் கொள்வதில்  பாதிக்கப்பட்டுள்ள  மக்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகளை  தீர்த்து வைக்கும்  தார்மிகக் கடப்பாடு எம் அனைவருக்கும்  உண்டு  என்பதை வலியுறுத்த  விரும்புகின்றோம்.

எல்லாம்  வல்ல  அல்லாஹ்  நம் அனைவரது  பாவங்களையும் மன்னித்து,  நல்லமல்களை  அங்கீகரித்து,  நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவானாக.

ஆமீன்.

 

அஷ்ஷைக்  ஏ.சி.  அகார் முஹம்மத்

பிரதித்  தலைவர்

அகில  இலங்கை ஜம்இய்யதுல்  உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன