ஹிஜ்ரி 1438.11.09 (2017.08.02)
ஊடக அறிக்கை
சந்திரக் கிரகணம்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்; 07.08.2017 ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் (Partial Lunar Eclipse) ஏற்படவுள்ளதாகவும் இதனை கொழும்பு (நேர வலையம் 5.5) நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரை இலங்கையில் பார்க்கலாம் எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி – 1044)
எனவே கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித் தொழுகுமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்வதோடு அன்றைய தினம் கிரகணம் ஏற்படும்போது கிரகணத் தொழுகையை அனைத்து மஸ்ஜிதுகளிலும் நிறைவேற்றுமாறும் சம்மந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறது.
அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
பிறைக் குழுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா