தேசிய பாதுகாப்பைப் பேணுவோம்

1440.08.19
2019.04.25

தேசிய பாதுகாப்பைப் பேணுவோம்

முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் பொறுப்புவாய்ந்த இலங்கைப் பிரஜைகளாகவும் எமது தாய் நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டில் சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் கடமைப்பட்டுள்ளோம். இவ்வடிப்படையில் பாதுகாப்புப் படையினருக்கும், சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கும் ஒத்தாசையாக இருக்கும்படி அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்.

குறிப்பாக நம்நாட்டில் தற்போது நிலவுகின்ற நெறுக்கடியான நிலைமையை கவனத்திற்கொண்டு நடந்துகொள்ளுமாரும் பாதுகாப்புப் படையினர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொழுது அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுமாறு வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.

எனவே, எமது சகோதரிகள் தற்பொழுதுள்ள நிலமையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகின்றோம். அவ்வாறே அனைவரும் தேவைப்படும் போது தன்னை அடையாளப்படுத்த தேசிய அடையாள அட்டையை தன்னுடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன