ACJU/FTW/2020/00-000
11.06.2020
19.10.1441
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ்
19.06.2020 வெள்ளிக் கிழமை ஜுமுஆ நடாத்துவது தொடர்பாக
- நிச்சயமாக அனைவரும் ஜுமுஆ தொழ வேண்டும் என்ற ஆசை உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், அனைவருக்கும் ஜுமுஆ தொழுவதற்கான சாத்தியப்பாடு இல்லாத நிர்ப்பந்தம் இருப்பதால் ஜுமுஆ தொழுகை தொழ சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கும் ஜுமுஆவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- ஜுமுஆ நடைபெறும் மஸ்ஜித்களில் சமூக இடைவெளி பேணி அனைவரும் ஜுமுஆவை நிறைவேற்ற முடியாது என்பதால், ஏனைய தக்கியாக்கள் ஸாவியாக்கள் போன்ற பொது இடங்களில் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜுமுஆத் தொழுகையை நிறைவேற்றுவற்கு வக்ப்ஃ சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜமஇய்யத்துல் உலமா வழிகாட்டியுள்ளன.
- இதுவிடயத்தில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி ஜுமுஆத் தொழுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பவர்கள் மாத்திரம் ஜுமுஆத் தொழுது கொள்வதோடு ஏனையவர்கள் ழுஹ்ருடைய அதான் கூறியதும் ஆரம்பத்திலேயே தாம் இருக்கும் இடங்களில் ழுஹ்ர் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
- மஸ்ஜித் நிர்வாகிகள் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளையுடன் இணைந்து ஜுமுஆத் தொழுவதற்கு அனுமதி கொடுப்பதற்கான பொருத்தமான வழிமுறையை கையாளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
- இதுவிடயத்தில் தமக்குக் கிடைத்திருக்கும் சலுகையை பயன்படுத்துவதோடு, இச்சலுகையை நமது நடவடிக்கைகளால் இழப்பதற்கு காரணமாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
- தற்போது ஜுமுஆ நடாத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், அரசாங்கம் கூறும் எண்ணிக்கையினர் சேர்ந்து முடியுமான இடங்களில் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜுமுஆவை நிறைவேற்றுவது கட்டாயமாகும். முடியுமாக இருந்து அதனை நிறைவேற்றாமல் விட்டுவிடுவது குற்றமாகும்.
- ஊரில் ஜுமுஆ நடாத்தினால் சிலருக்குத்தான் ஜுமுஆ நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் பலருக்குக் கிடைக்காது என்ற பரிதாபத்திற்காக ஜுமுஆ நடாத்தாமல் இருப்பது தவறாகும்.
அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா