30 ஆண்டுகால யுத்தத்தின் முடிவை நினைவுகூரல்

Ref: ACJU/NGS/2021/073

2021.05.18

இத்தினத்தில் 30 வருட யுத்தத்தின் முடிவையும் அதில் உயிர்த் தியாகம் செய்த முப்படையினரையும் ஏனைய பிரஜைகளையும் நினைவு கூறுகின்றோம்.

இன, மத வித்தியாசமின்றி அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக வாழும் ஒரு ஐக்கிய தேசத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இத்தியாகங்களை அர்த்தமுள்ளதாக்குவோம்.

இந்நாட்டுப் பிரஜைகளுடன் தொடர்புபட்ட விடயங்களில் தீர்வுகளை முன்வைக்கும் போது அனைவரையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுவதே எமது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம்.

கொவிட்- 19 தொற்றுநோயிலிருந்து எங்கள் தாய்நாடு விடுபட வேண்டுமென்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்க வேண்டுமென்றும், பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.

உலகெங்கிலுமுள்ள அனைத்து யுத்தங்களும் நிறுத்தப்பட்டு, உலகில் நீதி மற்றும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன