சமூக சீர்த்திருத்த பணியில் 150 ஆண்டுகளை கடந்த வரலாற்றை கொண்டுள்ள அறபுக் கல்லூரிகளின் வகிபாகம் மகத்தானதாகும். இன்று இலங்கையில் 300 க்கு அதிகமான அறபுக் கல்லூரிகள் அளப்பரிய சேவைகளை சமூகத்திற்கு தொடராக வழங்கிக் கொண்டுள்ளன. பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள், மஸ்ஜித் இமாம்கள், ஆசிரியர்கள், பல்கலைகழக விரிவுரையாளர்கள் என முஸ்லிம் கல்விமான்கள் பலரை உருவாக்கிய கல்வி பீடங்களாக அறபுக் கல்லூரிகளே காணப்படுகிறது.
அறபுக் கல்லுாரிகளின் நிதி நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய கல்வி முறை, கல்வி வளர்ச்சிகளுக்கு ஏற்ப கல்வி திட்டத்தை மேம்படுத்துவதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அறபுக் கல்லுாரிகள் பிரிவின் ஊடாக அறபுக் கல்லூரிகளின் நிதி நிர்வாக நடவடிக்கைகளையும் கல்விசார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் அறபு கல்லூரிகளின் எதிர்கால கல்விசார் நடவடிக்கைகளை வடிவமைப்பதில் தொடரான வழிகாட்டல்களை வழங்கவும் முனைகிறது.