உடலுறவின் போது மனைவியின் மார்பிலிருந்து வெளியாகும் பாலை கணவன் அருந்தலாமா?
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
மனைவி கணவனின்; விளை நிலம் ஆவாள். கணவன் விரும்பும் அனைத்து விதத்திலும் அவளுடன்; இன்பம் அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. என்றாலும், மாதவிடாய், பிள்ளைப் பேறு காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளல்; மற்றும் அவளது ஆசன வாயில் உடலுறவு கொள்ளல் ஆகியவற்றை இஸ்லாம் தடுத்துள்ளது.
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.
‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே, உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;.’
இவ்வடிப்படையில், கணவன், மனைவியுடன் சுகம் அனுபவிக்கும் போது அவளது மார்பிலிருந்து வெளியாகும் பாலை அருந்துவதில் தவறேதும் இல்லை என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
என்றாலும், ஹனபி மத்புடைய அறிஞர்கள், இரண்டு வயதை அடையாத குழந்தைகளுக்கே அல்லாஹ் பாலை ஹலாலாக்கியுள்ளான் என்பதால் கணவன் மனைவியின் பாலை மருந்து போன்ற காரணங்களுக்காகவே அன்றி, இன்பம் பெறும் நோக்குடன் அருந்துவது கூடாது என்று கூறுகின்றனர்.
மேலும், ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள் இரண்டு வயதை அடைந்ததன் பின் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு அனுமதி இருந்தாலும், இரண்டு வயதுடன் நிறுத்திக்கொள்வது விரும்பத்தக்கது என்றும் கூறுகின்றனர். இக்கருத்திலிருந்து கணவன் இன்பம் பெறும் நோக்கில் மனைவியின் பாலை அருந்துவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்ற விடயம் தெரியவருகின்றது.
எனினும், கணவன், மனைவியுடன் சுகம் அனுபவிக்கும் போது அவளது மார்பிலிருந்து வெளியாகும் பாலை அருந்துவதினால், அவ்விருவரும் பால் குடிக்கென்றுள்ள பிரத்தியேக சட்டங்களுக்கு உட்படமாட்டார்கள்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ்.