உயரத்தில் இமாம் தொழுவித்தல் பற்றிய மார்க்கத்தின் தெளிவு
Question

Fatwa

உயரத்தில் இமாம் தொழுவித்தல் பற்றிய மார்க்கத்தின் தெளிவு சம்பந்தமாக ஃபத்வாக் கோரி 2014.05.16 ஆந் திகதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
தொழுகையில் மஃமூம்களை விட இமாம் உயர்ந்த இடத்திலிருந்து தொழுகை நடாத்துவது மக்ரூஹ் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக அம்மார் இப்னு யாஸிர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்கள்.
عن همام: أن حذيفة أمّ الناس بالمدائن على دُكَّان، فأخذ أبو مسعود بقميصه فَجَبَذَهُ، فلما فرغ من صلاته قال: ألم تعلمً أنهم كانوا يُنْهَون عن ذلك؟! قال: بلى؛ قد ذكرت حين مددتني.( رواه أبوداود-(597)
ஒரு முறை ஹுதைபா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மதாஇன் எனும் ஊரில் (மஃமூம்களை விட) உயர்ந்த இடத்திலிருந்து தொழுகை நடாத்தினார்கள். அப்பொழுது அபூ மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரது ஆடையைப் பிடித்(து இழுத்து கீழ் பகுதியில் தொழுவைத்)தார்கள். தொழுகை முடிந்ததும், இவ்வாறு தொழுவதை விட்டும் அவர்கள் (சஹாபாக்கள் நபியவர்கள் மூலம்) தடுக்கப்பட்டிருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என ஹுதைபா றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அபூ மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவினார்கள். அதற்கு ஹுதைபா றழியல்லாஹு அன்ஹு அவர்கள்: ஆம், நீங்கள் என்னை இழுத்தபொழுது நான் விளங்கிக்கொண்டேன் என்று கூறினார்கள். (நூல் : ஸுனன் அபீ தாவூத், ஹதீஸ் எண்: 597)
என்றாலும், ஷாபிஈ மத்ஹபுடைய ஆலிம்கள், மஃமூம்களுக்கு தொழும் முறைமையைக் கற்றுக்கொடுக்க விரும்பும் இமாமும், பிற மஃமூம்களுக்கு சப்தத்தை எற்றி வைக்க நாடும் மஃமூமும் உயர்ந்த இடத்தில் தொழுவது விரும்பத்தக்கது என்று கூறுகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக் கூறுகின்றனர்.
عن سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ……قال : وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَيْهِ فَكَبَّرَ وَكَبَّرَ النَّاسُ وَرَاءَهُ، وَهُوَ عَلَى الْمِنْبَرِ، ثُمَّ رَفَعَ فَنَزَلَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ، ثُمَّ عَادَ، حَتَّى فَرَغَ مِنْ آخِرِ صَلَاتِهِ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنِّي صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي، وَلِتَعَلَّمُوا صَلَاتِي. (رواه مسلم-544)
ஸஹ்ல் இப்னு ஸஃத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு தடவை மிம்பரில் இருந்து கொண்டு தொழுதார்கள். மிம்பரில் ஏறி தக்பீர் கட்டினார்கள். மக்களும் அவர்களுக்கு பின்னால் இருந்து தக்பீர் கட்டினார்கள். பிறகு மிம்பரில் இருந்தவாரே ருகூஃ செய்தார்கள். ருகூஇலிருந்து எழுந்து பிறகு மிம்பரிலிருந்து கீழிறங்கி ஸுஜுத் செய்தார்கள். பிறகு மிம்பருக்கு மேல் சென்று முதலாவது ரக்அத்தில் செய்தது போன்று மற்ற ரகஅத்திலும் செய்தார்கள். தொழுகை முடிந்ததும் மக்களை முன்னோக்கி கூறினார்கள். ‘மக்களே, நான் இவ்வாறு செய்தது நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும், நான் தொழும் முறையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவுமாகும்.’ (நூல்: ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண் : 544)
இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உயர்ந்த இடத்தில் (மிம்பரில்) தொழுதது சஹாபாக்களுக்குத் தொழும் முறையைக் கற்றுக்கொடுப்பதற்காகவே என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகின்றது. நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு தொடர்ந்து தொழுகையை நடாத்திக் காட்டினார்கள் என்பது இல்லை.
அதே போன்று, தொழுவதற்கு வேறு இடமில்லை அல்லது நெருக்கடி போன்ற நிர்ப்பந்த நிலைமைகளிலும் உயர்ந்த இடத்திலிருந்து தொழுவது ஆகுமாக்கப்பட்டுள்ளது என ஷாபிஈ மத்ஹபுடைய ஆலிம்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, மேற்கூறப்பட்ட காரணங்கள் இல்லாதவிடத்து, இமாம் உயர்ந்த இடத்திலிருந்து தொழுகை நடாத்துவது மக்ரூஹாகும். மாலிக் மத்ஹபைச் சேர்ந்தவர்கள் பெருமைக்காக இமாம் இவ்வாறு உயர்ந்த இடத்திலிருந்து தொழுதால் அத்தொழுகை பாதிலாகிவிடும் என்று குறிப்பிடுகின்றனர்.
மேலதிக விளக்கங்களுக்கு கீழ் வரும் பிக்ஹ் வசனங்களைப் பார்க்கலாம்.
• قَالَ أَصْحَابُنَا يُكْرَهُ أَنْ يَكُونَ مَوْضِعُ الْإِمَامِ أو المأموم اعلا مِنْ مَوْضِعِ الْآخَرِ فَإِنْ اُحْتِيجَ إلَيْهِ لِتَعْلِيمِهِمْ أَفْعَالَ الصَّلَاةِ أَوْ لِيُبَلِّغَ الْمَأْمُومُ الْقَوْمَ تَكْبِيرَاتِ الْإِمَامِ وَنَحْوَ ذَلِكَ اُسْتُحِبَّ الِارْتِفَاعُ لِتَحْصِيلِ هَذَا الْمَقْصُودِ هَذَا مَذْهَبُنَا وَهُوَ رِوَايَةٌ عَنْ أَبِي حَنِيفَةَ وَعَنْهُ رِوَايَةٌ أَنَّهُ يُكْرَهُ الِارْتِفَاعُ مُطْلَقًا وَبِهِ قَالَ مَالِكٌ وَالْأَوْزَاعِيُّ وَحَكَى الشَّيْخُ أَبُو حَامِدٍ عَنْ الْأَوْزَاعِيِّ أَنَّهُ قَالَ تَبْطُلُ بِهِ الصلاة. (المجموع)
• الْمَشْهُورُ فِي الْمَذْهَبِ أَنَّهُ يُكْرَهُ أَنْ يَكُونَ الإِمَامُ أَعْلَى مِنْ الْمَأْمُومِينَ سَوَاءٌ أَرَادَ تَعْلِيمَهُمْ الصَّلاةَ أَوْ لَمْ يُرِدْ وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالأَوْزَاعِيِّ وَأَصْحَابِ الرَّأْيِ. (المغني لابن قدامة 2 ஃ 154 ط مكتبة القاهرة )
• ( وَ ) جَازَ ( فَصْلُ مَأْمُومٍ ) عَنْ إمَامِهِ ( بِنَهْرٍ صَغِيرٍ ) لا يَمْنَعُ مِنْ سَمَاعِ الإِمَامِ أَوْ مَأْمُومِهِ أَوْ رُؤْيَةِ فِعْلِ أَحَدِهِمَا ( أَوْ طَرِيقٍ وَ ) جَازَ ( عُلُوُّ مَأْمُومٍ ) عَلَى إمَامِهِ ( وَلَوْ بِسَطْحٍ ) فِي غَيْرِ الْجُمُعَةِ ( لا عَكْسُهُ ) وَهُوَ عُلُوُّ الإِمَامِ عَلَى الْمَأْمُومِ فَلا يَجُوزُ أَيْ يُكْرَهُ عَلَى الْمُعْتَمَدِ ( وَبَطَلَتْ بِقَصْدِ إمَامٍ وَمَأْمُومٍ بِهِ ) أَيْ بِالْعُلُوِّ ( الْكِبْرَ ) وَاسْتَثْنَى مِنْ قَوْلِهِ لا عَكْسُهُ قَوْلَهُ ( إلا بِكَشِبْرٍ ) أَوْ قَصْدِ تَعْلِيمٍ أَوْ ضَرُورَةٍ كَضِيقِ مَكَان أَوْ لَمْ يَدْخُلْ عَلَى ذَلِكَ بِأَنْ صَلَّى رَجُلٌ بِجَمَاعَةٍ أَوْ مُنْفَرِدًا فِي مَكَان عَالٍ فَاقْتَدَى بِهِ شَخْصٌ أَوْ أَكْثَرُ فِي مَكَان أَسْفَلَ مِنْ غَيْرِ دُخُولٍ عَلَى ذَلِكَ . ( الشرح الكبير )
(قَوْلُهُ أَيْ يُكْرَهُ عَلَى الْمُعْتَمَدِ ) أَيْ وَقِيلَ بِالْمَنْعِ وَمَحَلُّ الْخِلافِ مَا لَمْ يَقْصِدْ الْكِبْرَ بِتَقَدُّمِهِ وَإِلا حَرُمَ اتِّفَاقًا . ( قَوْلُهُ وَبَطَلَتْ بِقَصْدِ إمَامٍ وَمَأْمُومٍ بِهِ الْكِبْرَ ) ظَاهِرُهُ سَوَاءٌ كَانَ الْعُلُوُّ كَثِيرًا أَوْ يَسِيرًا وَظَاهِرُهُ أَيْضًا أَنَّهُ لَوْ قَصَدَ الْكِبْرَ بِتَقَدُّمِهِ لِلإِمَامَةِ. ( حاشية الدسوقي ) ( حاشية الدسوقي على الشرح الكبير 1ஃ 336ط دار الفكر )
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு