சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா நல்லடக்கச் செலவுக்காக ஸக்காத் நிதியில் இருந்து செலவு செய்யலாமா?

FATWA # 006/ACJU/F/2006

Question

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த முஸ்லிம்களது ஜனாஸா நல்லடக்க விடயங்களுக்காக ஸக்காத் நிதியில் இருந்து செலவு செய்யலாமா என்று வினவி 2004.01.13ஆந் தேதியிடப்பட்ட தங்களது கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள், அல்லது பொறுப்பாளர்கள் ஸக்காத் பெறத் தகுதி உடையவர்களான ஏழைகள், பரம ஏழைகள், கடனாளிகள் போன்ற பிரிவினர்களில் அடங்குபவர்களாக இருப்பார்களாயின், உயிரிழந்தோரின் ஜனாஸா நல்லடக்க விடயங்களுக்காக ஸக்காத் நிதியில் இருந்து பெற்று செலவு செய்யலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.