தராவீஹ் தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுதல்

FATWA #01/ACJU/F/2010/0114

Question

தராவீஹ் தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுதல் சம்பந்தமான மார்க்கத் தீர்ப்புக் கோரி 2009.02.10 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தொழுகையில் குர்ஆனை மனனமாக ஒதுவதே சிறந்தது. அப்படிச் செய்வது உள்ளச்சத்துடன், உடல் அமைதியுடன் தொழுவதற்கு உகந்ததாகும். அல்-குர்ஆனிலிருந்து ஒரு சில சிறிய ஸூராக்களே மனனம் உள்ள ஒருவர் தனக்கு மனனமில்லாத சிறிய, பெரிய ஸூராக்களை ஓதி நீண்ட நேரம் நின்று தொழ வேண்டும் என விரும்புகிறார் என்றால் அவர் தொழுகையில் அல்-குர்ஆனை பார்த்து ஓதுவது தொடர்பில் இமாம்களிடம் அபிப்பிராயப் பேதங்கள் உள்ளன.

அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி தொழுகையில் அல்-குர்ஆன் பிரதிiயை பார்த்து ஓதுவது ஆகும். இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) தனது அல்-மஜ்மூஃ எனும் கிரந்தத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்;.

‘அல்-குர்ஆன் பிரதியிலிருந்து அவர் அல்-குர்ஆனை பார்த்து ஓதினால் அவரின் தொழுகை முறிந்து போகாது. அவர் அதனை மனனமிட்டவராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சரியே. பாத்திஹா அவருக்கு மனனமில்லை என்றிருந்தால் அது (பார்த்து ஓதுவது) அவர் மீது கடமையாகும்.’

(நூல்: அல்-மஜ்மூஃ – பாகம்: 04, பக்கம்: 22, பதிப்பு : தார் இஹ்யாஃ அல்-துராஸ் அல்-அரபி, 2001)

பின்வரும் அறிவிப்பு மேற்படி கருத்துக்கு ஆதாராமாக அமைகிறது:

‘ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை அவர்களது அடிமை தக்வான்  குர்ஆனைப் பார்த்து ஓதி தொழுகை நடாத்துபவராக இருந்தார்கள்.’

(நூல்: பத்ஹ் அல்-பாரி, அறிவிப்பவர்: இப்னு அபீ முலைகஹ் (ரஹிமஹுல்லாஹ்), பாடம்: அடிமை மற்றும் உரிமை இடப்பட்ட அடிமை தொழுகை நடத்தல்)

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.