திருமணம் செய்து வைப்பதற்கு வலீ யாரும் இல்லாத பொழுது
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து வைப்பதற்குத் தகுதியான வலீகளின் ஒழுங்குமுறை பின்வருமாறு
- தந்தை
- தந்தையின் தந்தை அல்லது அவரது தந்தை
- உடன் பிறந்த சகோதரன்
- தந்தைவழிச் சகோதரன்
- உடன் பிறந்த சகோதரனின் மகன்
- தந்தைவழிச் சகோதரனின் மகன்
- தந்தையின் உடன் பிறந்த சகோதரன்
- தந்தையின் தந்தைவழிச் சகோதரன்
- தந்தையின் உடன் பிறந்த சகோதரனின் மகன்
- தந்தையின் தந்தை வழிச் சகோதரனின் மகன்
ஒரு பெண்ணுக்கு வலீயாக மேற்கூறப்பட்டவர்களில் யாரும் இல்லையாயின் (சுல்தான்) அதிகாரத்தில் உள்ள தலைவரே வலீயாக இருக்கவேண்டும்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
وعن عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : ” أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل فنكاحها باطل ، فنكاحها باطل ، فإن دخل بها فلها المهر بما استحل من فرجها ، فإن اشتجروا فالسلطان ولي من لا ولي له. (باب ماجاء لا نكاح الا بولي, كتاب النكاح, سنن الترمذي)
“வலீ யாரும் இல்லாதவளுக்கு (சுல்தான்) அதிகாரத்தில் உள்ள தலைவரே வலீயாவார்”
அதிகாரத்தில் உள்ள தலைவர் என்பது, நாட்டின் அல்லது ஊரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக உள்ள இஸ்லாமியத் தலைவரை அல்லது குறிப்பாக உள்ள நீதிபதியைக் குறிக்கும். திருமணம் போன்ற விடயங்களுக்கு மாத்திரம் பொறுப்பாகவுள்ளோரும் இதில் அடங்குவர்.
وفى تحفة المحتاج : ( فَإِنْ فُقِدَ الْمُعْتِقُ وَعَصَبَتُهُ زَوَّجَ السُّلْطَانُ ) ، وَهُوَ هُنَا وَفِيمَا مَرَّ وَيَأْتِي مَنْ شَمَلَهَا وِلَايَتُهُ عَامًّا كَانَ ، أَوْ خَاصًّا كَالْقَاضِي وَالْمُتَوَلِّي لِعُقُودِ الْأَنْكِحَةِ ، أَوْ هَذَا النِّكَاحِ بِخُصُوصِهِ ( فَصْلٌ : فِيمَنْ يَعْقِدُ النِّكَاحَ وَمَا يَتْبَعُهُ)
எனவே, இலங்கையைப் பொருத்தவரையில் விவாக, விவாகரத்து விடயங்களுக்கு அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் காழிகள் நியமிக்கப்பட்டி ருப்பதனால், திருமணம் செய்து வைக்க வலீ யாரும் இல்லாத பெண்கள் தனது பிரதேசத்திற்கு பொறுப்பாக உள்ள காழியை வலியாக்கி திருமனம் செய்தல் வேண்டும். இதற்கான வழிமுறைகளை காழிகள் மக்களுக்கு இலகுவாக்கி கொடுப்பது அவர்களது பொறுப்பாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.