தொழுகைக்காக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் ஒன்றை கைவிடுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 001/ACJU/F/2005

Question

மேற்படி விடயம் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட திகதியிடப்படாத கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

‘வக்ஃப்’ என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

ஒரு பொருளை வக்ஃப் செய்த நபர் எந்த நோக்கத்துக்காக அதை வக்ஃப் செய்தாரோ அந்நோக்கத்திற்கு பங்கம் ஏற்படாமலும், அதனை மாற்றாமலும் அதனைப் பயன்படுத்துவது  அதன் நிருவாகிகளின் கடமையாகும் என்பதுடன் தக்க காரணம் இன்றி அப்பொருளை அது வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தவது மிகப் பெரிய தவறுமாகும்.

எனவே தங்களால் முன்வைக்கப்பட்ட மேற்படிப் பிரச்சினையின் உண்மை நிலை உங்களது கடிதத்தில் கூறப்பட்டது போன்று இருப்பின் அப்பள்ளியில் தொழுகை நடாத்துவதை நிறுத்திவிட்டு வேறு ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்கேனும் அதனைப் பயன்படுத்துவதற்கோ அல்லது அதை அறவே பயன்படுத்தாமல் கைவிடுவதற்கோ மார்க்கத்தில் அனுமதி இல்லை.

 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.