வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கு முயல்பவர், மேலதிக காணி, கட்டடங்களுக்கு சொந்தக்காரராக இருந்தும் வியாபாரத்தில் நட்டமடைந்தவர், வட்டியின் அடிப்படையில் கடன் பெற்று, அடகு வைத்த பொருளை மீட்க முயற்சிப்பவர், வியாபாரத்;தை அபிவிருத்தி செய்வதற்காக கடன் பெற்றவர்,

FATWA # 015/ACJU/F/2006

Question

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கு முயல்பவர், மேலதிக காணி, கட்டடங்களுக்கு சொந்தக்காரராக இருந்தும் வியாபாரத்தில் நட்டமடைந்;தவர், வட்டியின் அடிப்படையில் கடன் பெற்று, அடகு வைத்த பொருளை மீட்க முயற்சிப்பவர், வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக கடன் பெற்றவர், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் போன்றவர்களுக்கு ஸக்காத் வழங்கல் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

01-          வெளி நாட்டில் வேலை வாய்ப்பொன்றை பெறுவதற்காக முயல்பவர்,

02-          மேலதிக காணி, கட்டடங்களுக்கு சொந்தக்காரராக இருந்தும், வியாபாரத்தில் நட்டமடைந்தவர்.

03-          வட்டியின் அடிப்படையில் கடன் பெற்று, அடகு வைத்த பொருளை மீட்க முயற்சிப்பவர்,

04-          வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக கடன் பெற்றவர்,

05-          சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்கு நிதித் தேவை உடையவர்.

மேற்படி தேவை உடையவர்கள், ஸக்காத் நிதியை பெறுவதற்கு தகுதியான ஏழைகள், பரம ஏழைகள் போன்ற பிரிவினரில் அடங்குவார்களாயின் அவர்களுக்கு ஸக்காத்தை வழங்கலாம்.

வட்டியின் அடிப்படையில் கடன் பெற்றவர், தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலையில் உள்ளவராயிருத்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய முறைகளில் கடன் பெறுவதைத் தவிர்ந்து கொள்வதே மிகவும் ஏற்றமானதாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.