ஷீஷா புகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA #

Question

எமதூரில் ஷீஷா பாவனை வேகமாக அதிகரித்து வருகின்றது. இது தொடர்பான மார்க்க விளக்கங்கள் முறண்பட்டதாக காணப்படுகின்றன. உலமாக்களில் சிலர் ஹராம் என்றும் சில உலமாக்கள் ஹலால் என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, இது தொடர்பான மார்க்கத் தீர்ப்பினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

புகைத்தல் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 023ஃயுஊதுருஃகுஃ2006 ஆம் இலக்க பத்வா ஒன்றை 2006.10.11ஆம் திகதி வெளியிட்டுள்ளது. அந்த பத்வாவில் புகைத்தலுக்குப் பயன்படுத்தப்படும் திரவியங்களில் ஒன்றான புகையிலை மூலம் பாரிய நோய்களும், தீங்குகளும் ஏற்படுகின்றன என்பதால், சிகரட் போன்றவைகளை புகைப்பதும் அதை விற்பனை செய்வதும் ஹராமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வடிப்படையில், ஷீஷாவிலும் புகையிலை பிரதானமாக உள்ளடங்குவதால், புகைத்தலுக்கு வழங்கப்பட்டுள்ள மார்க்கத் தீர்ப்பே ஷீஷாவுக்கும் பொருந்தும்.

புகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு.