Researched Fatwa
ஸக்காத்துல் ஃபித்ரின் நிறை அளவினை எப்படி கணிப்பீடு செய்வது?
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸக்காத்துல் ஃபித்ரின் நிறை அளவு எப்படி அமைய வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
‘நாங்கள் நபியவர்களின் காலத்தில் நோன்புப் பெருநாள் அன்று, உணவில் ஒரு ‘ஸாஃ’வை ஸக்காத்துல் ஃபித்ராக கொடுத்தோம். அக்காலத்தில் எமது உணவாக வாட்கோதுமை, உலர் திராட்சை (ப்ளம்ஸ்), பேரீச்சை ஆகியவை இருந்தன’ என்று அபூ ஸஈத் அல்-குத்ரீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் : ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 1439)
மேற்படி ஹதீஸில் வந்துள்ள ‘ஸாஃ’ என்பது சஹாபிகளது காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ள, தற்போது வழக்கொழிந்த ஓர்; அளவை முறையைச் சார்ந்ததாகும். அது ஒருவரது இரு உள்ளங் கைகளால் நிறைத்து அள்ளப்படும் நான்கு அள்ளுகளைக் குறிக்கும். அள்ளு என்பதின் சரியான நிறுவை அளவினை மட்டிடுவது சிரமமான காரியமாகும். எனினும் நவீன கால மார்க்க சட்ட அறிஞர்கள் ‘ஸாஃ’ எனும் அளவினை சர்வதேச (எஸ்.ஐ.) அளவுத் திட்டத்தின் அடிப்டையில் நிறுவை அளவுடன் ஒப்பிட்டு அதனை 2,400 கிராம் (2.4 கிலோ கிராம்) என்று தீர்மானித்துள்ளனர்.
வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.