Researched Fatwa
அன்பளிப்பாகக் கிடைத்த மத்ரஸாக் காணியை வேறு தேவைக்குப் பயண்படுத்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
குறித்த காணி குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வக்பு செய்யப்பட்டிருந்தால் வக்பு செய்தவர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ அந்நோக்கத்திற்காகவே அக்காணியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
அவ்வாறு வக்பு செய்யப்படாமல் அக்காணி மத்ரஸாவிற்காக அன்பளிப்பு செய்யப்பட்டிருப்பின் வக்புடைய சட்டத்திற்கு உட்படமாட்டாது.
குறிப்பிட்ட அன்பளிப்பு செய்யப்பட்ட காணியை, மத்ரஸா நடாத்துவதற்குப் பயன்படுத்த முடியாது என்றிருப்பின், மத்ரஸாவிற்கு வருமானம் வரும் வகையில் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்ட விதத்தில் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை.
என்றாலும், குறிப்பிட்ட காணியை அன்பளிப்புச் செய்தவர் மத்ரஸா நடைபெற வேண்டும் எனும் நன்நோக்கில் அன்பளிப்புச் செய்திருப்பதால் பகுதி நேர மத்ரஸா அல்லது மக்தப், குர்ஆன் மத்ரஸா போன்ற தேவைகளுக்காக பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

