2026 மார்ச் 01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவாகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு கண்டி, யஹலதென்ன பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில், இளைஞர்கள் சமூகத்தில் சிறந்த முன்மாதிரி மிக்கவர்களாக திகழ்வதற்கான பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
குறித்த செயலமர்வில், யஹலதென்ன பிரதேசத்திலுள்ள 130க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –



