2026 மார்ச் 15ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் வட்டதெனிய, மஸ்ஜிதுன் நூர் தக்கியா பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சி குறித்த பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை எவ்வாறு வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது என்பது தொடர்பில் பல தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் முன்மாதிரி மிக்க இளைஞர் சமூகமாக திகழ்வதற்கான வழிவகைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில் வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –



