அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் நெறிப்படுத்தலில் கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ஆலிம்களுக்கான விஷேட வழிகாட்டல் செயலமர்வு’

2024.12.18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் நெறிப்படுத்தலில் கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் ஆலிம்களுக்கான விஷேட வழிகாட்டல் செயலமர்வொன்று மாவனல்லை, அல்-இக்ரா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் ஆலிம்கள் விவகாரம், இளைஞர் விவகாரம், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்றிட்டங்கள், அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரம் போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதோடு, குறித்த துறைகளில் ஆலிம்கள் தமது திறன்களை வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இச்செயலமர்வில் கலந்துகொண்டிருந்த ஆலிம்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு திறன் விருத்திப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இதில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம், அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், இளைஞர் விவகாரக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன