அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பிரிவு 2018.04.21 அன்று தேசிய சமாதான மற்றும் இன நல்லிணக்கத்திற்கான அமைப்பின் தலைவர் இத்தாபன தம்மலங்கார தேரரை கொட்டாவ விகாரையில் சந்தித்தனர். மேற்படி சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் ,உதவிப் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் , அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான், அஷ்-ஷைக் மாஹிர், அஷ்-ஷைக் நுஃமான் மற்றும் மனோ தத்துவவியல் நிபுணர் அல்ஹாஜ் தஹ்லான் ஆகியோர் கலந்து கொண்டு பல முக்கிய விடயங்களை கலந்துரையாடினர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா