பிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்

11.12.2018 அன்று பிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக், உப தலைவர்களான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா, அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் ஷூரி மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் ஆகியோரும், இளைஞர் விவகாரப் பிரிவின் தலைமையக செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன