2024.11.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் அவிசாவளை கிளையின் ஏற்பாட்டில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான வலுவூட்டல் செயலமர்வொன்று அவிசாவளை, கொட்டியாகும்புர பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில், பிரதேசத்திலுள்ள அல்-குர்ஆன் கற்பித்தல் பணியில் ஈடுபடும் முஅல்லிம், முஅல்லிமாக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
குறித்த செயலமர்வில் வளவாளர்களாக அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
– ACJU Media –