2025.02.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் கிளைகள் விவகாரக் குழுவினால் ஜம்இய்யாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள் நடாத்தப்பட்டன.
இந்நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளஃரீப், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், கிளைகள் விவகாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் காதர் ஆகியோருடன் ஜம்இய்யாவின் உப குழுக்களின் இணைப்பாளர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
– ACJU Media –