2025.01.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அவசர ஃபத்வாக் குழுக் கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக் அவர்களது தலைமையில் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், பல்வேறு சமகால பிரச்சனைகள், மார்க்க சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –