அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் கேகாலை மாவட்டத்தை மையப்படுத்தி நடாத்தப்பட்ட தேசிய வலையமைப்புத் திட்டம் தொடர்பிலான விஷேட ஒருநாள் செயலமர்வு

2025.01.19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் கேகாலை மாவட்ட ஜம்இய்யா கிளைகளை மையப்படுத்தி தேசிய வலையமைப்புத் திட்டம் தொடர்பிலான விஷேட ஒருநாள் செயலமர்வு கிரிங்கதெனிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது.

குறித்த செயலமர்வில் கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் கீழ் இயங்கும் 10 பிரதேசக் கிளைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆலிம்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஸித் முலஃப்பர், கல்விக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன