முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கொழும்பு – தெற்கு பிராந்திய பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் விஷேட அதிதியாக பங்கேற்பு

2024.12.01ஆம் திகதி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெஹிவளை-கல்கிஸை பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் தெஹிவளை முஹைதீன் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ‘கொழும்பு தெற்கு பிராந்திய பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வில்’ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் முக்கிய உரையொன்றையும் நிகழ்த்தினார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கௌரவ பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் தலைமையில் தெஹிவளை முஹைதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் குறித்த செயலமர்வு நடைபெற்றது.

இச்செயலமர்வில், பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்தும் பள்ளிவாயல்கள் எவ்வாறு சமூக மையமாக செயற்படுகின்றன என்பது குறித்தும் கௌரவ பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் கௌரவ உதவிப் பணிப்பாளர் அஷ்-ஷேக் எம்.எஸ். அலா அஹ்மத் ஆகியோரினால் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தர்ம நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

இதில், விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்த ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், ‘பள்ளிவாயல்களது நம்பிக்கையாளர்களின் சிறப்புகள் மற்றும் கடமைகள்’ எனும் தொனிப்பொருளில் முக்கியம் உரையொன்றை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் கீழ் வரும் அம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்:

● எல்லோரும் மதிக்கப்படவேண்டும்.

● யாரும் யாரையும் எந்தவிதத்திலும் நோவினை செய்யக்கூடாது.

● அனைவரும் புரிந்துணர்வோடு பயணிக்கவேண்டும்.

● உடல் உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபடுவது போல பொதுப்பணிகளில் ஈடுபடும் தரப்புக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக செயற்படவேண்டும்.

● ஒவ்வொரு தரப்பினரும் தமக்குரிய பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுவதுடன் பிற தரப்பினருடன் ஆரோக்கியமான கலந்துரையாடலை பேணவேண்டும்.

● மூத்தவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் அவர்களை கண்ணியப்படுத்தவேண்டும்.

●நம்பிக்கையாளர்கள் பள்ளிவாயல்களின் சட்டங்களை சரிவர அறிந்துகொள்வதுடன் அவற்றை இலகுவாக நடைமுறைப்படுத்தும் வழிவகைகளையும் கண்டறியவேண்டும்.

இச்செயலமர்வில் கொழும்பு-தெற்கிலுள்ள 35 பள்ளிவாயல்களின்‌ 150 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன