சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து கலந்துரையாடுவதற்காக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

நிலவும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான விஷேட ஒன்றுகூடல் 2024.11.27 அன்று முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இவ்வொன்றுகூடலில், நாட்டில் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் எவ்வாறான பங்களிப்புக்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் வருகை தந்திருந்த பிரமுகர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதில், 12 சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் கொலன்னாவை பள்ளிவாயல்கள் சம்மேளனம், புதுக்கடை பள்ளிவாயல்கள் சம்மேளனம், புறக்கோட்டை பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜம்இய்யா சார்பில் தலைவர் மற்றும் உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். நாழிம் ஆகியோருடன் சமூக சேவைக் குழுவின் இணைப்பாளர் மற்றும் திட்டமிட்டல் அதிகாரி என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன