நிலவும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான விஷேட ஒன்றுகூடல் 2024.11.28 அன்று முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இவ்வொன்றுகூடலில், நாட்டில் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் எவ்வாறான பங்களிப்புக்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் வருகை தந்திருந்த பிரமுகர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதில், கொழும்பு மாவட்டத்தின் 12 பள்ளிவாயல்கள் சம்மேளனங்களின் பதவி தாங்குனர்கள் மற்றும் கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
– ACJU Media –