2025.01.22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அம்மாவட்டத்திலுள்ள ஆலிம்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு செயற்றிட்டம் தொடர்பிலான அறிமுக நிகழ்வு கண்டி மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், கண்டி மாவட்டக் கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் அப்துல் கஃப்பார் அவர்கள் நிகழ்வின் குறிக்கோள்களையும், நோக்கங்களையும் தெளிவுபடுத்தினார்.
அதனையடுத்து ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் முக்கியமான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விசேட உரையொன்றும் நிகழ்த்தினார்.
இறுதியாக, ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், இளைஞர் விவகாரக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குறித்த உப குழுக்கள் தொடர்பிலான குழுச் செயற்பாடுகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
– ACJU Media –