2025.01.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவினால் மாவனல்லை – வில்பொல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகளை மையப்படுத்தி ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டன.
ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி, குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஹைதர் அலி, அஷ்-ஷைக் மபாஸ் முனாஸ், அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோரினால் பிரதேசத்திலுள்ள வெவ்வேறு இடங்களில் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் நடாத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, வில்பொல அல்-மனார் ஜுமுஆ மஸ்ஜிதில் சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோரினால் இளைஞர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று நடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
மேலும், குறித்த மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான செயலமர்வொன்றும் நடாத்தப்பட்டது. அதில் அஷ்-ஷைக் நுஸ்ரத், அஷ்-ஷைக் ஹைதர் அலி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.
அன்றைய வெள்ளிக்கிழமை தினம் குறித்த பிரதேசத்திலுள்ள 04 ஜுமுஆ மஸ்ஜிதுகளில் ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தலைப்பில் குத்பா பிரசங்கங்களும் நிகழ்த்தப்பட்டன.
– ACJU Media –