2026 ஏப்ரல் 01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் குழுக்கூட்டம் அதன் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன் அடுத்த குழுக் கூட்டத்தினை நடத்துவத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர், அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் பிரிவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


– ACJU Media –


