2025.04.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அக்குரனை பிரதேசக் கிளைக்கான நிர்வாகத் தெரிவானது அக்குரனை அஸ்னா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
குறித்த நிர்வாகத் தெரிவானது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.ஜே.எம். அப்துல் காலிக், அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், அஷ்-ஷைக் எம்.ரிபாஹ் ஹஸன், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோரது மேற்பார்வையில் இரகசிய வாக்கெடுப்பு முறை மூலம் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.


– ACJU Media –



