2025 டிசம்பர் 11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில், நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த பாதிப்பு நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண உதவி ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்தும் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மேலும், ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –


