2025.05.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அவசர ஃபத்வாக் குழுக் கூட்டம் குழுவின் பதில் செயலாளர் அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், பல்வேறு சமகால பிரச்சனைகள், மார்க்க சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
– ACJU Fatwa –