அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அவசர ஃபத்வாக் குழுக் கூட்டம் – ஏப்ரல் 2025

2025.04.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அவசர ஃபத்வாக் குழுக் கூட்டம் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில், ஜம்இய்யாவின் பெண்கள் ஃபத்வா பிரிவினை ஆரம்பித்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பல்வேறு சமகால பிரச்சனைகள், மார்க்க சந்தேகங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன