2025.07.19ஆம் திகதி, ஜம்இய்யாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் வருடாந்த ஒன்றுகூடலில் அகில ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார்.
குறித்த ஒன்றுகூடலானது மல்வான – செலான் பங்களாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், உரையாற்றிய ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்கள், ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள், முன்னெடுப்புகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் ஆலிம்கள் சமூக பணிகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது பற்றியும் விளக்கமளித்தார்.
இவ்வொன்றுகூடலில் கம்பஹா மாவட்டக் கிளையின் தலைவர், செயலாளர், நிர்வாகிகளுடன் மாவட்டத்திலுள்ள 08 பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –




