‘ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்லுறவை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளில் கம்பளை பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி நடாத்தப்பட்ட வழிகாட்டல் நிகழ்ச்சிகள்

2025 செப்டம்பர் 18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலின் கீழ் ஜம்இய்யாவின் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் ‘ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்லுறவை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் கம்பளை பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி நடாத்தப்பட்டன.

அந்தவகையில், கம்பளை அல்-மினா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என 196 பேர் கலந்து பயன்பெற்றனர்.

அதேபோன்று, கம்பளை ரஹ்மானிய்யா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் 204 பேர் கலந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வுகளில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன