2026 ஜனவரி 16ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினருக்கும் திருகோணமலை மாவட்ட ஜம்இய்யாவின் உப பிறைக் குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று திருகோணமலை மாவட்ட ஜம்இய்யா கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிறை மற்றும் வானியல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் திருகோணமலை மாவட்ட உப பிறைக் குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில், ஜம்இய்யா சார்பில் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.


– ACJU Media –





